என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குத்திய நண்பர்"
- வழி மறித்து பணம் கேட்டார்.
- குடிபோதையில் தகராறில் ஈடுபட்டார்
கோவை:
கோவை புலியகுளம் அம்மன் குளம் 2-வது வீதியை சேர்ந்தவர் அபிஷேக் (வயது 21). இவர் ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவ த்தன்று இரவு அபிஷேக் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றார். பாப்பநாயக்க ன்பாளையம் காய்கடை பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, அவரது நண்பர் கோகுலகிருஷ்ணன் (23) என்பவர் மறித்து அபிஷேக்கிடம் செலவுக்கு பணம் கேட்டார்.
அதற்கு அவர் தற்போது பணம் இல்லை என தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து கோகுலகிருஷ்ணன் அபி ஷேக்கின் செல்போனை பிடுங்கி வைத்து கொ ண்டார். அவர் திருப்பி கேட்டபோது, கோகுல கிருஷ்ணன் கொடுக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடபட்டார். இதில் அவர்களுக்கி டையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கோகுலகிருஷ்ணன் அங்கிருந்த பீர் பாட்டிலை எடுத்து அபிஷேக்கை தாக்கினார். பின்னர் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தி மிரட்டல் விடுத்து சென்றார்.
இதில் அபிஷேக் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து அபிஷேக் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து கோகுலகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.
கோவை மசக்காளி பாளையம் நீலியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் அருண்குமார் (32). இவர் தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், அருண்குமார் சம்பவத்தன்று வேலைக்கு செல்வதற்காக நீலியம்மன் கோவில் வீதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் குடிபோதையில் அருண்குமாரிடம் தகராறில் ஈடுபட்டார்.
அப்போது வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த அந்த நபர் அருண்குமாரை தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அருண்குமாரை அங்கிருந்த வர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)